பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலயத்தின் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவனும் கழகத் தோழர் இளையவன் (வேலாயுதம்) அவர்களின் புதல்வனுமாகிய செல்வன் வேலாயுதம் வெனிஸ்ரன் அவர்கள் சுகயீனம் காரணமாக 30.07.2021 வெள்ளிக்கிழமை மரணமெய்தினார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).