இலங்கையில் இதுவரை “குழந்தைகளில் பல அமைப்பு அழற்சி” என்று அழைக்கப்படும் கொரோனாவுக்கு பின்னரான நோயால் சுமார் 34 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது அத்தகைய ஐந்து குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் வைத்திய நிபுணர் நலின் கித்துல்வத்த தெரிவித்தார். Read more
தமிழகம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வவுனியா மாவட்டத்தில், கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களும் அதனூடாக ஏற்படும் மரணங்களும், தமது மாவட்டத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை வெளிகாட்டுகிறது என, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏதிலிகளாக அடைக்கலம் தேடிச் சென்று தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை நேற்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளமை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாட்டில், 4 இலட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. முதல்சுற்றில் இன்று (27) புதிதாக பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,812 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.