கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகளின் வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் விரைவாக மூட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள பாடசாலைகளை உடனடியாக மூடாவிட்டால் சாதாரணத் தர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.