அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி எந்தவொரு கட்சியினதும் பங்களிப்பின்றி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக 5 ஆவது நாளாகவும் மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக காலி முகத்திடலுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டு வருவோருடன் பிரதமர் என்ற வகையில், அவர்களுடன் கலந்துரையாட தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்கள் தயார் எனின், அவர்களின் பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாட தயாராகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு இலவசமாக உணவு , குடிநீர் போன்றவற்றை மக்களும் தன்னார்வத் தொண்டர்களும் வழங்கி வருகின்றனர்.