மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள காயாமடு சிவசக்தி முன்பள்ளியின் சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது சிவசக்தி முன்பள்ளியின் 26 பிள்ளைகளுக்கும் புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் ராகவன் முன்பள்ளியின் ஆசிரியைகள் உதயவாணி, தமிழினி மற்றும் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.