தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இன்றுகாலை 9.30மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.