வவுனியா ஆசிகுளம் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தரணிக்குளம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இருபது வருட காலமாக திருத்தப்படாத உள்ளக வீதிகள் பிரதேச சபை வாகனங்கள் மூலம் எமது கட்சியினுடைய ஆசிகுளம் வட்டார உறுப்பினர் உத்தரியநாதன் அவர்களின் மேற்பார்வையில் சனசமுக நிலைய தலைவர் திரு சுந்தரலிங்கம், செயலாளர் திரு தேவதாஸ் மற்றும் கிராம மக்களின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டது. Read more
புதிய அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பெயரிடப்பட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது
இன்றைய தினம் அரசாங்கத்தில் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.