திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத் தோழர்கள் வெள்ளை சுரேஸ், ரூபன் (பஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாகிய திரு. சண்முகம் கந்தையா அவர்கள் இன்று முற்பகல் காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, தந்தைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
24.05.2022