இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் P.H.N. ஜயவிக்ரமவிற்கு இடையிலான சந்திப்பு இன்று காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. Read more
குறைந்த பணியாளர்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை (திங்கள் முதல் வௌ்ளி வரை) முன்னெடுக்குமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், சகல நீதிமன்றங்களின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் உடனடியாக ஆட்சி மாற்றமொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் போலி ஆவணங்களின் ஊடாக காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதனால், காணி கொள்வனவாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.