யாழ். கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை மாணவன் ஜெ.லக்சிகனின் பாடசாலைப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் அவருக்கு 48,000/= ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். எழுவைதீவு பத்திமா விளையாட்டுக் கழகத்திற்கு 25,000/= ரூபா நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டது. Read more
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஜூலை 10ஆம் திகதி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.