Header image alt text

மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். Read more

2021ஆம் ஆண்டு முதல் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 50 இரட்டை கெப் வண்டிகள் மற்றும் ஜீப்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அமைச்சரவைப் பத்திரம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு, நேற்று (07) அறிவித்தார். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார். Read more

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், “கோட்டாபய கடற்படை முகாம்” அமைந்துள்ள பிரதேசத்தில், தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சியானது  காணிகளுக்குரிய தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. Read more

முல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படை தளத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப்  பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களான தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்    வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் முன்பாக போராட்டம் மேற்கொண்டிருந்தனர் . Read more

அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறுகிறார். Read more

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். Read more

ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. Read more