இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது என்றார். Read more
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று(12) ஜெனீவா நகரில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்துடன் தொடர்புபட்ட வகையில் நடைபெறுகின்ற தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும், அது தொடர்பில் ஆலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அந்தணர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆலயத்துடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள் ஆகியோர்க்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
11.09.1987 இல் வவுனியாவில் மரணித்த தோழர் நவநீதன் (இராஜலிங்கம் -அனந்தர்புளியங்குளம்) அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
கட்டுவன், தென்மயிலையை பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவரும், தோழர் அசோக் (பிரகஸ்பதி – பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி பரஞ்சோதி திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் நேற்று (10.09.2022) சனிக்கிழமை பிரான்ஸில் இயற்றை எய்தினார்.
கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த எமது கட்சியின் செயற்பாட்டாளருடைய தந்தையார் அமரர் செபஸ்ரியன் ஆரோக்கியசாமி அவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவு ரூ 15,000/- தொகையினை வழங்கியுள்ளது.
பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.