ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் சென்ற் சேர்வியர் பாடசாலையில் கல்விகற்று கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தைப் பெற்று பொறியியற் பீடத்திற்கு தெரிவாகியுள்ள மன்னார் பெரியகமம் எழுத்துரைச் சேர்ந்த பற்றிக் ஆனந்தகுமார் மெட்ரில் பியூலா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் 390,000 ரூபா பெறுமதியான மடிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது. இவரின் தந்தையார் புளொட் அமைப்பின் முன்னாள் போராளியாவார்.

01.11.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சிரேஷ்ட உபதலைவர் வே.நல்லநாதர்(ராகவன்), கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சம யோகானந்தராசா, மாவட்ட செயலாளர் அந்தோனி ஜேம்ஸ், மாவட்ட பொருளாளர் பா.மேரி லூட்ஸ்குருஸ் (மாலா) மற்றும் தோழர்கள் ஸ்டீபன், பாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.