வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்திருந்தது.  குறித்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 21 வயதான யுவதி மற்றும் 35 வயதான ஆண் ஆகியோர் உயிரிழந்ததுடன் 08 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் வவுனியா பொலிஸாரினால் நேற்று(31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸார் தொடர்ந்தும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.