Header image alt text

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரியதற்கு அமைவாக அது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவது குறித்து இன்றுகாலை 10மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) நிறைவேற்றுக்குழு கூட்டம் மெய்நிகர் வழியாக நடைபெற்றது.

Read more

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார். இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more