வவுனியா – ஆதி விநாயகர் திருக்கோவில் பரிபாலன சபையின் சார்பில் ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் வட மாகாணத்திற்கான மாகாண மற்றும் மாவட்ட கராத்தே போட்டிகளில் பங்குபற்றி ’34’ பதக்கங்களைப் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட INTERNATIONAL MARTIAL ARTS ASSOCIATION யின் வவுனியா கிளை மாணவர்கள் இன்று ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தின விழாவில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வணக்கத்திற்குரிய குகனேச்வரசர்மா ,
		    
திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பயிற்சி விமானம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டார்.
வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 4 மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.