Header image alt text

22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலையை அண்மித்து பரவிவரும் அடையாளம் காணப்படாத நோயொன்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். Read more

கார்பன் வெளியேற்றம் தொடர்பான (Carbon Credits) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-உடனான சந்திப்பின் போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. Read more