Header image alt text

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுப்பில் இருந்து மீண்டும் கடமைக்கு திரும்பிய வலிமேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் சிலர், பிரதேசசபை செயலாளரினால் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக சம்பந்தப்பட்ட திணைக்கள உயர்மட்டத்திற்கு முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

Read more

உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் C. தொலவத்த தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த போதும், இடையில் இல்லாமல் போன அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். இதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ,999 குடும்பங்களை சேர்ந்த 70,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கானை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அராலி, பொன்னாலை பகுதிகளில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் உற்சவம் இனேஐய தினம் நடைபெற்றது. இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதற்கு கழகத்தின் சர்வதேசக் கிளை உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

Read more

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. சித்தி விநாயகர் முன்பள்ளியின் ஆசிரியைகள் வி.நீரஜா, ச.டினோசா ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் டர்ஜினா சுகுமார்,

Read more

18.08.2001இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குட்டி (செம்பாப்போடி .மேகநாதன்- திமிலைதீவு) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். மைதானத்திற்கு அருகிலிருந்த ஆழமான நீர் நிறைந்த கிடங்கில் பாடசாலை மாணவர்கள் இருவரும் தவறி வீழ்ந்துள்ளனர். Read more

அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர்  Nathaniel C. Fick உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு, இணையவௌி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன தொடர்பில் Nathaniel C. Fick, கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. Read more