புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (28.05.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரையில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தினை கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள், அவ்விடயத்தில் எதிர்நோக்குகின்ற சவால்கள் பற்றியும் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிப் பிரச்சினைகள், சிறைச்சாலைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்புப் பிரச்சினை என்பன குறித்து மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.