இறுதிக் கிரியைகள் இன்று நண்பகல் 12மணிமுதல் நடைபெற்று பிற்பகல் 2.30மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனக் கிரியைககள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதிக் கிரியைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, ஆர்னோல்ட், சர்வேஸ்வரன் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண அமைச்சர் குருகுலராஜா, தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், யாழ். உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசிங்கம் மற்றும் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டனர்.