ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம், 5,450 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற முக்கிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மாகாண ரீதியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
அனைத்து கல்வியல் கல்லூரிகளையும் இணைத்து பல்கலைக்கழகமாக மாற்றும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டு சீருடைகள், அப்பியாசப் புத்தகங்களை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.