இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று முதல் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.