Header image alt text

தமிழ் பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பில் ஐ.நா பிரதிநிதி கவலை-

UNஇலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கவலையடைவதாக, மோதல்களின்போது இடம்பெறுகின்ற பாலியல் கொடுமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பங்குரா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன்னவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும், இவ்விடயத்தில் இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என தாம் அவரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பங்குரா மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி கையாளப்படுகிறது-அமைச்சர் பீரிஸ்-

GL-Peirisதிட்டமிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க தொகைகளில் நிதி கையாளப்படுவதற்கான சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத நிதியத்திற்கான நிதியை சேகரித்தல், பயங்கரவாத்தை மீளமைப்பு திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதுபற்றி சர்வதேச ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.

புலிகளின் மீளிணைவு தொடர்பாக மேலும் ஒருவர் கைது-

imagesCA47OAWZகோபி, அப்பன் மற்றும் தேவியனுடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்பட்டு, மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக, பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவரும் ஏனைய மூவரும் இணைந்து வடக்கில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் அண்மையில் வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று கைதான யாழ் குருநகர் பீச் வீதியைச் சேர்ந்த அருளானந்தன் டினேஸ்குமார் என்பவர் கோபியின் உறவினர் எனவும், இவர் கோபி உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

நெடியவனைக் கைதுசெய்யும் விடயம் தொடர்பாக நோர்வே ஆராய்வு-

downloadபுலிகளின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் சிவபரன் நெடியனை கைது செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கை குறித்து நோர்வே ஆராய்ந்து வருகின்றது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு அந்நாட்டின் அரச வானொலிக்கு இத்தகவலை வெளியிட்டுள்ளது. நெடியவன் உள்ளிட்ட 40 புலிகளுக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன அண்மையில் தெரிவித்திருந்தார். நெடியவனை கைது செய்ய உதவுமாறு இலங்கை நோர்வேயிடம் கோரி இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் நோர்வே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மேலும் கூறப்படுகின்றது.

57ஆவது ஒழுங்கைக்கு ‘சங்கம் ஒழுங்கை’ என பெயர் மாற்றம்-

57th Lane Sangam Laneகொழும்பு-06, வெள்ளவத்தையிலுள்ள 57ஆவது ஒழுங்கை ‘சங்கம் ஒழுங்கை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி வை.கங்கைவேணியன் (வேலணை வேணியன்) தெரிவித்துள்ளார். இந்த ஒழுங்கையின் பெயரை மாற்றுவதற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகிய இருவர் மட்டுமே உதவிபுரிந்ததாக தெரிவித்த கங்கைவேணியன் அவ்விருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 23.04.2014 இல் வெளியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் ஒரே நாளில் 6 பேர் கைது-

imagesCA5PZGM2யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லியடிப் பகுதியி; 3 பேரும், சாவகச்சேரியில் 2பேரும், கொடிகாமத்தில் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை பொலிஸார் நீதிமன்றங்களில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வட மாகாண பெண்களை பொலீஸில் இணைக்க நடவடிக்கை-

woman polcie 01வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் ஆரம்பித்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது- யாழ், மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நான் கடமையேற்ற காலப்பகுதியில் யாழ்,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் குறைவாக உள்ளதாக பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விடையம் தொடர்பாக நான் ஆராய்ந்து பார்த்ததில் யாழ் மாவட்டத்தில் மட்டும் அல்லது வட மாகாணத்திலேயே இந்தக் குறைபாடு உள்ளமை கண்டறியப்பட்டது. Read more

வவுனியா வடக்கின் அபிவிருத்தி குறித்து ஜி.ரி. லிங்கநாதன் ஆலோசனை-

GT Lingam 03 GT Lingan 02வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் 2014.04.22 செவ்வாயன்று காலை 10.30 மணியளவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உனைஸ் பாரூக், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா கலந்துகொண்ட கூட்டத்தில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியாவின் முன்னைநாள் உப நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் தெரிவித்த விடயங்களாவன, பிரதேச ரீதியாகக் காணப்படும் வீதி அபிவிருத்தித்திட்டங்களை உடனடியாக திருத்தங்கள் செய்து மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதுடன் உள்ளுர் போக்குவரத்து வசதிகளை நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மேற்கொள்ள இரண்டு பேருந்துகளை நிறுத்தவேண்டும். Read more

2013, அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணியின் வசம்-

arasa athipar vetri kannam (3)arasa athipar vetri kannam (1)2013ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்திற்கான போட்டிகள் யழ். மானிப்பாய் இந்துக்கல்லூhயில் 22.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மானிப்பாய் பொலிஸ் அதிகாரி, மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். முதல் நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு வைபவ ரீதியாக விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணிக்கும் சங்கானை பிரதேச செயலக அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆண்களுக்கான துடுப்பாட்டத்தில்;; சங்கானை பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் மாவட்ட செயலக அணியினரை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது. அத்துடன் பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தில் வேலணை பிரதேச செயலக அணியினை எதிர்த்து Read more

மூளாய் விக்டோறி விளையாட்டு கழகத்துடன் சந்திப்பு-

Moolai Victory Sports club (4)Moolai Victory Sports club (1)22.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகத்தினருடன் வலிமேற்கு பிரதேச தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டுத்திடல் இன்மை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் மூளாய் பகுதியில் இரண்டு அரச பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் இருந்தும் இன்றுவரை நிரந்தரமான ஒர் விளையாட்டு திடல் இதுவரை இல்லை. இதனால் இளைஞர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இதுவரை பலரிடமும் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் எந்த ஒரு பரிகாரமும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மூளாய் பகுதியிலுள்ள கொத்தித்துறைக்கு முன்பாகவுள்ள அரச காணி பயன்பாடற்ற நிலையில் உள்ளமையை பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுக்கு நேரடியாக காண்பித்ததோடு விளையாட்டு மைதானத்திற்கான உத்தேச வரைபடத்தினையும் கையளித்தனர். இந் நிலையில் உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறையில் பாரிம்பரிய விளையாட்டு விழா-

KaytsKayts (4)Kayts (3)Kayts (2)யாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 23.04.2014 புதன்கிழமை அன்று பிரதேச பொலிஸ் திணைக்களமும் சமூர்த்தி அதிகார சபையும் இணைந்து புத்தாண்டை முன்னிட்ட இலங்கையின் பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்தியுள்ளன. சமுர்த்தி முகமையாளர் திருமதி வி.அறிவரசி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம், கணக்காளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர்காவற்றுறை தலமைப்பீட பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அணுசக்தி திட்டம்-

Sri-lanka_Russia_Nuclearரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அணுசக்தி தொடர்பான அறிவை பரிமாற்றிக்கொள்ளும் வகையிலான செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, ரஷ்யாவின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அணு ஆராய்ச்சி ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது. அணுசக்தி தொடர்பான வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காக பாடசாலைகளில் அணுசக்தி தொடர்பான பாடவிதானங்களை அதிகரிக்க உள்ளோம். செயன்முறை ரீதியில் விடயங்களை கற்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது என கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன மேலும் கூறியுள்ளார்.

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த பீ.சிதம்பரம் கருத்து-

P.chidamparamதமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் இந்த முறை எதிர்பாராத வகையில் அமையும் என இந்திய மத்திய அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களின் வாக்குப் பதிவுகள் இன்றுகாலை ஆரம்பமாகின. 9 கட்டங்களாக நடைபெறும் இந்;திய பொதுத் தேர்தலின் ஆறாம் கட்டமாக இன்று தமிழ் நாட்டில் தேர்தல் இடம்பெறுகின்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 6 மணி வரையில் இடம்பெறுகிறது. இந்த முறை தமிழகத்தில் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்றுகாலை தமது வாக்கினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பீ.சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கமியுனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என்பன தனித்து போட்டியிடுகின்றன. அதேநேரம் வை.கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திரவிட கழகம் என்பன பாரதீயே ஜனதா கூட்டணியில் போட்டியிடுகின்றன. புதுச்சேரி மற்றும் தமிழக மாநிலங்களில் இருந்து 40 உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரிக்கை-

இலங்கையினுள் தேசிய ஒன்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் எனின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமாஜவாதி மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் 5 இடதுசாரி கட்சிகள் இணைந்து அமைக்கப்பட்ட இந்த சமாஜவாதி மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் ஊடகவியாளர் சந்திப்பை நடத்தியது. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயகார இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் தேசிய ஒன்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பளையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு-

பளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 5.30அளவில் இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையில் பணியாற்றும் 26வயதான தங்கராசா சாந்தகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ வாகனம் மோதி விபத்து, 14பேர் காயம்-

மன்னார் – தள்ளாடி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இராணுவத்தினரின் உழவு இயந்திரம், கெப் வாகனத்துடன் மோதியதில் 14பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுள் 11பேர் இராணுவ வீரர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் நேற்றுமாலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பயண அறிவுறுத்தல், பிரித்தானியா புதுப்பிப்பு-

பிரித்தானியா இலங்கை தொடர்பான தமது பயண அறிவுறுத்தலை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தரின் உருவப்படுத்தை கையில் பச்சைக்குத்தி இருந்தமைக்காக பிரித்தானியாவின் பிரஜை ஒருவரை நாடுகடத்த இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புத்தரின் உருவப்படம் உள்ளிட்ட பௌத்த மதம் சார்ந்த எந்த உருவங்களையும் உடலில் பச்சைக் குத்தியவர்கள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் கோரிக்கை-

பௌத்த புத்தகங்களை தவிர நாட்டின் ஏனைய விடயங்கள் தொடர்பில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்பு பிரிவிரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில புத்தகள் நாட்டில் வெளியாகின்றன. அவை தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விசாரணைக்கு இலங்கைப் பொலீஸ் ஒத்துழைப்பு-

சிறுநீரக வியாபாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, இந்திய குற்றத்தடுப்பு பிரிவின் விசேடகுழு உதவிகோரும் பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இலங்கையை மையப்படுத்தி சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக வியாபாரம் தொடர்ப்பில் ஐதராபாத் காவற்துறையினர் விசாரணை மேற்கொள்ளவதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது குறித்து கூறும்போதே காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறுநீரக வியாபாரம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக இந்திய விசேட குழு இலங்கை வரள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக், 4 மாதங்களில் 500 முறைப்பாடுகள்-

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் குறித்து 500ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளில் 80மூ போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தவை என பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மற்றையவர்களின் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்தல் மற்றும் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழில் வைத்தியசாலைக்கு சென்றவரை காணவில்லை-

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கடந்த 16ஆம் திகதி சென்ற குடும்பஸ்தர், இன்னமும் வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்களினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி, கல்வயல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் செல்வரத்தினம் (வயது 68) என்பவரே காணாமற்போனவராவார். குறித்த நபர் மனநோய் சிகிச்சைக்காகவே வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக உறவினர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவை தடுத்து நிறுத்துமாறு தேசப்பற்றுள்ள இயக்கம் கோரிக்கை-

இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் தென் ஆபிரிகாவின் மத்தியஸ்தை நிராகரிக்குமாறு தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்பை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு உரையாற்றிய அந்த இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தென் ஆபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சர்வதேச மத்தியஸ்தம் ஒன்று அவசியம் இல்லை எனவும் வசந்த பண்டார கூறியுள்ளார்.

சட்டவிரோத பயணம், 25 இலங்கையர்கள் திருப்பி அனுப்பிவைப்பு-

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற 25பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அந்தமான் தீவுகளில் தங்கியிருந்த இவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதுடன், விசாரணைகளை அடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.

யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளரின் வங்கிக் கணக்கு முடக்கம்-

யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளராது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் மரண மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புலி உறுப்பினர்களுக்கு வழங்கியதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் பதிவாளர் இதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் 80 லட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்கே முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கச்சேரியின் முன்னாள் பதிவாளரான சின்னராசா சுபாராஜா என்பவரின் வங்கிக் கணக்கே முடக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கையர்கள் லிபியா செல்வதற்குத் தடை-

லிபியாவிற்கு தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, லிபியாவிற்கு தொழில் நிமித்தம் தொழில் முகவர் நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் செல்வதற்கு மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் கட்டுப்பாட்டில்-

ஆட்கடத்தல் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தியான் மூலம் இலங்கையுடனான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக அவுஸ்ரேலியாவின் குடிவரவு துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேரிகளின் வருகை தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் சட்டரீதியாக இலங்கையர்களின் அவுஸ்ரேலியா நோக்கிய குடிபெயர்வு 74 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வருடம் அவுஸ்ரேலியாவுக்கு சட்ட ரீதியான நுழைவு அனுமதியுடன் சென்ற 4 ஆயிரத்து 987 இலங்கையர்களில் 3ஆயிரத்து 456 பேர் அவுஸ்ரேலியாவில் தங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடமையை செய்யத் தவறிய மூன்று பொலிஸார் பணிநீக்கம்-

கடமையை செய்ய தவறிய மூன்று பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் சாலியவௌ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் சாலியவௌ – வீரபுர பகுதியில் இருப்பதாக 21ம் திகதி தகவல் கிடைத்தது. அதன்பின் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் மாலையே தப்பிச் சென்றுள்ளார். இராணுவ வீரர் தப்பிச் சென்ற சமயத்தில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளை வாக்கெடுப்பு-

இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். இம்முறை மே தின ஊர்வலம் புத்தூர்ச் சந்தியில் இருந்து ஆரம்பித்து சாவகச்சேரி நகரசபை மைதானம் வரையில் சென்று அங்கு மே தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர்கள், உளளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தென்கொரிய தூதுக்குழு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு-

GL-Peirisஇலங்கை வந்துள்ள தென்கொரிய தூதுக்குழுவிற்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றுமாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய வெளிவிவகார அமைச்சா யூ மயூங் – ஹவான் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் நால்வர் கைது-

imagesCA5PZGM2கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதுடன்;, அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்ததாகவும், இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வவுனியா தலைமைப் பொலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் சுவரொட்டி அச்சிட்ட கணினி ஆசிரியர் கைது-

imagesCA47OAWZபுலிகள் அமைப்பின் மீள் உருவாக்கித்தின் பொருட்டு சுவரொட்டிகளை அச்சிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கணினி ஆசிரியர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் யாழ் மானிப்பாயில் அமைந்துள்ள அவரது கணினி நிறுவகத்திற்கும் சீல் வைத்துள்ளதுடன் அங்குள்ள கணினிகள், மடி கணினிகள் பலதையும் குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கின் நிலைமை குறித்து தென்கொரிய பிரதிநிதிகள் ஆராய்வு-

இலங்கையில் மோதல்கள் நிறைவடைந்த பின் பல வகையிலும் பாரிய முன்னெற்றங்கள் காணப்பட்டுள்ளதாக தென்கொரிய அரசின் விசேட பிரதிநிதி யு மியுன் க்வான் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்றுமுற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்ட விதம் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட விதம் தொடர்பாக தென்கொரிய பிரதிநிதிகள் தகவல் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது, வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி, தென்கொரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண்டைதீவில் இளம் பெண் கடத்தல் தொடர்பில விளக்கமறியல், பிணை-

law helpயாழ். மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச்செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் செல்லவும், பிரதான சந்தேகநபரை மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகன சாரதியையும் கடத்தப்பட்ட பெண்ணையும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் பணிப்பெண்களுக்கு வேலைவாய்ப்பு-

untitled eஐரோப்பிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார். 25 – 45 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களுக்கே இந்த வேலைவாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக தகவல் அறிய, 0773 148 927 , 0773 983 536 மற்றும் 0775 489 506 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்துமாறு அவர் கேட்டுள்ளார். மூன்று வாரகால பயிற்சியின் பின் மொழி தேர்ச்சிப் பயிற்சியில் சித்திபெறும் பெண்களை எவ்வித கட்டணமும் இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிறை பாதுகாப்புக்காக புதிய துப்பாக்கிகள் கொள்வனவு-

சிறைச்சாலைகள் பாதுகாப்புக்காக புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. 305 புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரசிறி பல்லேகம தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்கள பாதுகாப்புச் செயலாளரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கும் சகல சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமீது விசாரணை நடத்த நடவடிக்கை-வைகோ-

ycoநரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின், பொதுச்செயலாளர் வைகோ சாத்தூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போதே இதனை தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குற்றங்களையும் வெளிப்படுத்துவதற்கு இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ உறுதியளித்துள்ளார்.

வலிமேற்கு தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம்-

arali kilakku (2) arali kilakku (3) arali kilakku (4) arali kilakku (5)யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரினால் முன்னெடுக்கப்படும் 100 பஜனை பாடசாலைத்திட்டம் 18.04.2014 அன்றுமாலை அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இன் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் nஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சுமார் 100 குமேற்பட்ட மாணவர்களுக்கு யாழ்பாணம் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகாணந்தரின் நூல்களை அன்பளிப்பு செய்து பஜனை பாசாலையை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அவர் கருத்து தெரிவிக்கையில் வெறுமனவே எமது பண்பாடு சீர்குலைந்து விட்டது இளைய தலைமுறை வழிதவறிவிட்து என்று கூறுவதில் பயன் ஏதுமில்லை. இச்சூழ்நிலையில் இருந்து எமது இளைய தலைமுறையை காப்பதற்கு நாம் முன்வர வேண்டும் எம் மத்தியில் உள்ள பண்பாட்டு அம்சங்கள் சீரழிக்கப்படுமானால் எமது இனத்தினுடைய இருப்பும் அற்றுப்போகும் நிலை உருவாகும். இந் நிலையில் சழூகத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

வவுனியா வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்-

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். கைகுண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கைதி சுகயீனமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் விளக்கம்-

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்றை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி,எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திபில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

சுயாதீன ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்-

அண்மையில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளலான சிவஞானம் செல்வதீபன் இனம் தெரியாத மிலேச்சர்களால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் எனது வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கின்றேன். ஜனநாயகத்தின் துண்களில் ஒன்றாக கருதப்படும் ஊடகத்துறை யாழ்பாணத்தில் மலினப்படுத்தப்படுவது மிக கேவலமான ஒன்றாகவே உள்ளது. இச் செயற்பாடுகள் மக்கள் ஜனநாயகத் தன்மையில் கொண்டுள்ள மிகுதி நம்பிக்கையையும் இழக்கச் செய்யும். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் வழமையான ஒன்றாகவே உள்ளது. இச் செயற்பாடுகளின் பின் இனம் தெரியாத நபர்கள் என்பதும் வழமையான ஒன்றாகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாக ஊடகம் சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் (திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்)

வலி மேற்கில் கல்லறையிலிருந்து கலிலோயா வரை உயிர்ப்பின் பஜனை-

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் காவேரி கலாமன்றம் கிறீஸ்துவுக்கான சிறுவர் ஊழியம் இணைந்து நடாத்திய கல்லறையில் இருந்து கலிலோயா வரை உயிர்ப்பின் பஜனை 19.04.2014 அன்றுமாலை இடம்பெற்றது. இந் நிகழ்வானது முன்னாள் வலிமேற்கு பிரதேச சபையின் செயலரும் காவேரி கலாமன்றத்தின் பொருளாளருமாகிய திரு.எஸ்.புத்திசிகாமணி தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி. மோகன்ராஜ் அவர்களும் முதன்மை விருந்தினராக பரந்தன் சேகர சேகரக் குரு வண இயேசுரட்ணம் ரிச்சட் சோதி சொறுபன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், இறையியல் பேராசிரியர் தேவஅருட்செல்வம் மற்றும் விஞ்ஞான பேராசிரியர் கலாநிதி நித்தி கனகரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வலிமேற்கில் சிகரட் விற்பனை செய்யாத கடைகளுக்கு சான்றிதழ் வழங்குதல்-

யாழ். வலிமேற்கு பிரதேச சபையினது கடந்த மாதாந்த கூட்டம் தவிசாளர் வலிமேற்கு பிரதேச சபை திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றபோது பலசரக்கு கடைகளில் சிகரட் வியாபாரம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாடசாலைகளுக்கு அண்மையில் சிகரட் விற்பனையை தடுத்தல் என்பனவற்றோடு சிகரட் விற்பனை செய்யாத வியாபார நிலையங்களுக்கு பிரதேச சபையால் சான்றிதழ் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் வியாபாரம் செய்வோர் வியாபாரம் செய்யும்வேளை வெற்றிலை பாக்கு சாப்பிட்டவாறு வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்படடதோடு நிலத்தில் வைத்து மீன் விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்-

கிளிநொச்சி பகுதியில் லொறி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுத்திகரித்த தண்ணீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டதில் இவ் விபத்து இன்றுகாலை நேர்ந்துள்ளது. இதுபற்றிய விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்-

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் சிலர் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ரயில்வே திணைக்களத்தில் இருக்க வேண்டிய தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ரயில்வே திணைக்களத்திற்கான தொழில்நட்ப உதவியாளர்களின் எண்ணிக்கை 8,600ல் இருந்து 5,000வரை குறைக்கப்பட்டுள்ளதென இலங்கை சுதந்திர ரயில்வே ஊழியர்கள் சங்க பிரதம செயலர் நதீர மனோஜ் பெர்ணான்டோ கூறியுள்ளார். இதேவேளை, ரயில்வே திணைகளத்திற்கான தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கையை 8,600ஆக தொடர்ந்தும் பேண அனுமதிக்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வெலிகம, பொல்அத்துமோதற பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி, இந்நாட்டு தயாரிப்பு ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 8, மேலும் பல வெடிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்புறுகம பிரதேசத்தைச் சேர்ந்த 33வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலீஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆளுநரின் உறுதிமொழியையடுத்து போராட்டம் நிறைவு-

யாழ். மாநகர சபையில் பதில் தொழிலாளர்கள் கடமையாற்றி கடந்த ஏழு மாதங்களாக வேலையற்று இருக்கும் தொழிலாளர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை துரிதமாக வழங்கக் கோரி ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்றுகாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 5 தொடக்கம் 12 ஆண்டு காலமாக நாங்கள் மாநகரசபையில் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றினோம். திடீரென கடந்தாண்டு 9ம் மாதம் தற்காலிக தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த 9ம் மாதம் 13ம்திகதி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டோம். அப்போது எமது போராட்ட இடத்திற்கு வருகை தந்த தொழில் திணைக்கள அதிகாரிகள் யாழ் மாநகர சபை மேஜர் ஆகியோர் எமக்கு Read more

வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனை பாடசாலைத்திட்டம் 

chulipuram periya thampiranchulipuram periya tampiranchulipuram periyathampiran 02chulipuram periya tampiran2

யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 100 பஜனைப் பாடசாலைத் திட்டமானது நேற்று முன்தினம் 18.04.2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், சுமார் 50ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யாழ் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் நூல்களை அன்பளிப்புச் செய்து பஜனை பாசாலையை ஆரம்பித்து வைத்தார்.

siththankerny amman kovilsiththankerny amman kovil3siththankerny amman kovil5இதேவேளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரினால் முன்னெடுக்கப்படும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் நேற்று முன்தினம் மாலை யாழ். சித்தன்கேணி அம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், சுமார் 50ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யாழ் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் நூல்களை வழங்கி பஜனைப் பாசாலையை ஆரம்பித்து வைத்தார்.

சண்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கலந்துரையாடல்-

1யாழ். சுழிபுரம் பெரியபுலோ சண்ஸ்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினருடன் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பனருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 14.04.2014 அன்றுமாலை கலந்துரையாடியிருந்தார். இதன்போது சண்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பல்வேறு தேவைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் கலாநிதி கண்ணண் மற்றும் விளையாட்டுக் கழக போசகர் ஆனந்தி உட்பட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வலிமேற்கு பிரதேச சபையில் அட்டவணைப்படுத்தாத பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு கடந்த 17-18.04.2014 வியாழக்கிழமை அன்றுவரையில் யாழ். வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுவதில் தென்னாபிரிக்கா உறுதி-

இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதில் தென்னாப்பிரிக்கா உறுதியாக இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்துக்கு பொறுப்பாக தென்னாப்பிரிக்க அரசாங்கம் நியமித்துள்ள தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் மத்தமேலா சிரேல் ரமபோசா விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். ஏற்கனவே இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்றம் மற்றும் நகர சபைத் தேர்தல்கள் எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தரப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

iranaimadu neer unnaviratham.....கிளிநொச்சி விவசாயிகளால் இன்றுகாலை தொடக்கம் கரைச்சி பிரதேசசபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வழங்கிய உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்தில் தமது கோரிக்கைகளைப் புறந்தள்ளி கிளிநொச்சி மக்களையும் யாழ் மக்களையும் முரண்படவைக்கும் செயற்பாடுகளில் நீர்வழங்கல் அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் இரணைமடுக்குளத்தைச் சார்ந்த 22 உப-பிரிவு விவசாய அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கில் வீதி புனரமைப்பு-

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட செட்டியார்மடம் துணைவி சந்தியை இணைக்கும் ஏறத்தாழ 1.5கிலோமீற்றர் நீளமான வீதியானது பல காலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்தது. மேற்படி வீதியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் அதேவேளை விவசாய தேவைக்கும் உரிய ஒன்றாக உள்ளது. அண்மையில் இந்த வீதி புனரமைக்கப்பட்டமையானது தமக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், தமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போரை வெளியேற்ற நடவடிக்கை-

அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போரை வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போர் தொடர்பில் ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். பலவந்தமாக தங்கியிருப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இதுவரை குறித்த இடங்களிலிருந்து வெளியேறாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அரச காணிகளை கைப்பற்றியிருப்போர் தொடர்பில் கிராமசேவை அதிகாரிகள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படும் என அமைச்சர் தென்னகோன் மேலும் கூறியுள்ளார்.

பஸ்களில் மும்மொழிக் கொள்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு-

போக்குவரத்துசபை பஸ்களில் மும்மொழிக் கொள்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரச மொழிகள் ஆணைக்குழு குற்றச்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிபதியின் ஊடாக தெளிவூட்டப்பட்டுள்ளதை அடுத்து அதற்கான அறிக்கையை வழங்குவதற்கு போக்குவரத்து சபைக்கு இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே கைதானார்-பொலீஸ் பேச்சாளர்-

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக பொலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கான பணத்தை புலிகளே இப் பெண்ணுக்கு வழங்கியுள்ளனர். அது தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க வருடாந்த பொதுக்கூட்டம்-

kootturavu sankam 03 kootturavu sankam 04 kootturavu sankamயாழ். வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுசங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தலைவர் திருமதி.சிவநீதன் அம்சமாலிதேவி அவர்கள் தலைமையில் வட்டு கிழக்கு அறிவொளி சனசழூக நிலையத்தில் நேற்றையதினம் (18.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க தலைவர் திரு.கே.சிவகுருநாதன், யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க செயலாளர் ச.பரமாணந்தம். சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க சங்கானை பிராந்திய சபை தலைவர் வீ.செல்வரத்தினம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வை.கைலைநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக து-157 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகஸ்தர் நிரோஜினி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகஸ்தர் விஜிதா, யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க வெளிக்கள உத்தியோகஸ்தர் கௌரிதேவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயற்பாடுகளிற்கு பரிபூரண ஒத்துழைப்பு நல்கிய பெண்களுக்கும் இக் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களுக்கும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது மதாந்த கொடுப்பனவின் ஊடாக அன்பளிப்புகளை வழங்கி ஊக்குவித்தார். திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பதவிக்கு வந்த நாள் முதலாக தனது மாதாந்த கொடுப்பவை சமூக நன்மைக்காக வழங்குவது இங்கு குறிப்பிடக்கூடியது.

சக்கரத்தை முருகமூர்த்தி கோவில் மணிமண்டப திறப்புவிழா-

karanthai 03 karanthai 05 karanthai 06 karanthai 08 karanthai 09 karanthai 10 karanthai 11 karanthaiயாழ். சங்கரத்தை கரந்தை குளவத்தை முருகமூர்த்தி கோவில் நாகலிங்கம் இரத்தினசிங்கம் மணிமண்டபம் திறப்பு விழா 12.04.2014 அன்று ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.இ.வெள்ளியம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வீ.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் திரு.த.குருகுலராஜா அவர்களும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் தெல்லிப்பளை துக்கையம்மன் ஆலய தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் வடமாகாணசபை கல்வி அபிவிருத்தி ஆலோசகர் கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இப் பிரதேசத்தில் ஆலய அறநெறி மாணவர்களின் வளர்ச்சிக்கும் பாலர்பாடசாலை மாணவர்களின் வழர்ச்சிக்கும் இவ்வாறான ஒர் சிறப்பு மிகு மணிமண்டபத்தினை அமைத்தமையை இட்டும் இம் மண்டபத்தினை இப்பிரதேசத்திற்கு அற்பணித்தவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை இப்பிரதேசத்தினுடைய தவிசாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைய சூழலில் சழூகத்திற்காக தன்னலமற்று பணியாற்றிவருபவர்கள் செற்பமாகவே உள்ளனர் இந் நிலையிலும் கல்விப்பணிக்காக பணியாற்றிவருபவர்கள் இன்னமும் மிக குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் இவ்வாறான இப்பணிகளை மேற்கௌ;பவர்களை பாராட்டுவது காலத்தினுடைய மிக முக்கிய தேவை ஆகும். இதேபோன்று தற்போது இங்குள்ள கல்விச்சூழலில் பல தடங்கல் நிகழ்வுகள் நிலைகள் உள்ளன. Read more

சித்தன்கேணியில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்புவிழா-

sithankerny 03 sithankerny 04 sithankerny 05 sithankernyஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்பு விழா நிகழ்வு யாழ். சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரமத்தில் ஆசிரியர் குகபரன் தலைமையில் 12.04.2014 அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (நல்லை ஆதீனம்) அவர்களும் பிரம்மச்சாரி யாக்கிறிட் சைத்தைன்யா (சிம்யா மிசன்) அவர்களும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இதன்போது, இன்று இந்நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இன்று எமது பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றாக வட்டு இந்துக்கல்லூரி திகழ்கின்றது பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற தயாராக உள்ளனர். இவ்வாறான மிகப் பெரிய கைங்கரியத்திற்கு வழிவகுத்தவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆவார். இவரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் இன்று மிகப் பெரிய சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இன்று நாம் ஒரு பொதுத்தேவைக்காக சிறுதுண்டு நிலம் பெறுவது என்பதே இயலாத நிலையில் உள்ளது. Read more