Header image alt text

உரும்பிராயில் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

P1380247தியாகி பொன். சிவகுமாரனின் 42ஆவது நினைவு நிகழ்வுகள் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. திரு. நித்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு சிவகுமாரனின் சகோதரி மற்றும் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தி.சிறீதரன் (சுகு), வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோரும், பொதுமக்களும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

யாழ். ஸ்கந்தவரோதய கல்லூரியும், ஸ்கந்தவரோதய ஆரம்பப்பாடசாலையும் இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவமுகாம்-(படங்கள் இணைப்பு)

P1380201கொழும்பு பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தவரோதய கல்லூரியும், ஸ்கந்தவரோதய ஆரம்பப்பாடசாலையும் இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவமுகாம்-2016 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் முற்பகல் 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான “ஸ்கந்தவரோதயன்” கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வரையறுக்கப்பட்ட அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பி.சுந்தரலிங்கம், யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி கே.நந்தக்குமார், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சு.சண்முககுலகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனாவுக்கு விஜயம்-

parliamentபாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளனர். சீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் நாளை சீனாவுக்கு செல்லவுள்ளார். மேலும், பிரதி அமைச்சர்களான அஷோக் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார, ஜே.சி. அலவதுவல, வடிவேலு சுரேஷ், ஜயந்த சமரவீர, கே.கே.பியதாஸ, சந்தித் சமரசிங்க, நிஹால் கலப்பத்தி, அரவிந்த் குமார், விஜித பேருகொட மற்றும் கென்டர் அப்புகாமி ஆகியோரும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள்-

fghfggகொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் நிர்மாணித்து கொடுக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வரை, தற்காலிக குடியிருப்புக்களையும் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது காணிகளுக்குள் குறித்த தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளாம். இதன்படி இந்த நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

கொஸ்வத்தை கைக்குண்டு வீச்சில் மூவர் பலி-

bomb-blast11-21கொஸ்வத்தை – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்றவேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படுகாயமடைந்த தாய் உயிரிழந்த நிலையில், சிறுமி வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை பெண் ஒருவர் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி நடப்பதாக கிடைத்த தவலையடுத்து, குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை திறந்து வைக்கவுள்ள மோடி-

modi maithriமீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வசதியுடனேயே இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவரென தெரிவிக்கப்படுகின்றது.

குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி கையெழுத்து வேட்டை-

kumar gunaratnamமுன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குமார் குணரட்னத்திற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஒரு வருட சிறைத் தண்டனையும் 50,000 ஷரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

“காணவில்லை” எனும் சிறப்புச் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்-

missingயுத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மோதல்களின்போது காணாமல் போனவர்களுக்கு, ‘காணவில்லை’ எனும் பெயரில் சிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல்களினால் அல்லது அம்மோதலின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாகவும், அரசியல் அமைதியின்மை காரணமாகவும் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் போயுள்ள நபர்களை பதிவு செய்வதற்கான தேவை எழுந்துள்ளது. அவ்வாறான நபர்களை பதிவு செய்வதன் மூலம் அல்லது காணாமற் போன நபர்களது உறவினர்களுக்கு ‘காணவில்லை’ எனும் சான்றிதழை வழங்குவதன் மூலம், காணாமற்போன நபர்களது சொத்துக்களையும் உடைமைகளையும் தற்காலிகமாக முகாமைத்துவம் செய்வதற்கு வழிவகுக்கும். Read more

பிரசன்ன மற்றும் அவரது மனைவி ஆகியோர்க்கு பிணை-

prasannaபாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. காணி விவகாரம் ஒன்றில் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சதுப்புநிலத்தை நிரப்புவதற்காக அந்நிலத்தை சூழ குடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கி, 64 மில்லியன் ரூபா பணத்தை கோரியதோடு, அத்தொகையிலிருந்து 15 மில்லியனை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, பிரசன்ன ரணதுங்கவுக்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்-

ertereffமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக எல்லைக்குள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் மிருக வேட்டை இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது மரக்குற்றிகளை ஏற்றிய வண்டியில் பயணித்த இராணுவத்தினரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மூவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தனர். Read more

சலாவ மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம், வீடுகளில் கொள்ளை-

aarpattamகொழும்பு – அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியை மறித்து அப்பிரதேச மக்கள் இன்றுமுற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வீதியை மீளத் திறப்பதாக நேற்று இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சுத்தப்படுத்துமாறு கோரியே அப்பகுதி மக்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் களஞ்சியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45க்கு ஏற்பட்ட தீ விபத்தினால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளில் சிதறிக்கிடக்கின்றன. இதேவேளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் தீ பரவியமையால் அந்த பகுதியிலிருந்து வெளியேறியவர்களின் வீடுகளில் கொள்ளைச்சம்பங்கள் இடம்பெற்றமை தொடர்பில் 28 முறைபாடுகள் பதிவாகியுள்ளன. Read more

பிரித்தானிய பிரதிநிதிகள் இரா.சம்பந்தன் சந்திப்பு-
sampanthan (12)இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்படி இருவரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே அவர்கள் இருவரும் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்க வலியுறுத்தி கையெழுத்து வேட்டை-

76766குமார் குணரத்னத்தின் குடியுரிமையினை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி யாழில் கையெழுத்து பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், அடக்குமுறை சட்டங்களை சுருக்கிக் கொள், சகல அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்து போன்ற வாகசங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை தொங்கவிட்டு, தமது எதிர்ப்பினை அவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், இது தானா ஜனநாயகம் எனும் தொனிப்பொருளில், துண்டுப் பிரசுரத்தினையும் மக்கள் மத்தியில் அவர்கள் கையளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை-

missingயாழில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரைக் காணவில்லை என, பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளவராவார். நேற்று மாலையில் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த இவர், இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்தவின் உயர் பாதுகாப்பு அதிகாரி சி.ஐ.டியில் ஆஜர்-

sadassasasமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் வன்னியாராச்சி, ஆவணங்கள் சிலவற்றுடன் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியிருந்தார். 

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்-

blood testஇலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என அறிந்துகொள்ளுவதற்கு இரத்தப் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு-

east chiefகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பி.லியன ஆராய்ச்சியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை கடும் சொற்களால் திட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்-

edwrewrewவவுனியா வடக்கு, புளியங்குளம் இராமனூர் பகுதியில் அமைந்துள்ள, தனிநாயகம் அடிகளார் வித்தியாலய பகுதிக்குள் நுழைந்த யானைகள், அங்குள்ள பயன்தரு மரங்களை அழித்துள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில் உள்ள இப் பாடசாலை வளாகத்திற்குள், நேற்று இரவு நுழைந்த யானைகள், இவ்வாறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இவ்வாறு பாடசாலை வளாகத்திற்குள்ளும் இக் கிராமத்திற்குள்ளும் யானைகளின் அட்டகாசம் பெருகி காணப்பட்டுள்ளது. யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக, அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், யானைகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு அதிகம்-எஸ்.வியாழேந்திரன் எம்.பி-

asdsadsadsவடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகங்களின் மட்டும் ஆளுநர்கள் தலையீடுகள் அதிகமாக உள்ளன. இலங்கையிலுள்ள வேறு மாகாணங்களில் இவ்வாறான தலையீடுகள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். அத்துடன் நல்லாட்சியை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை சிறுபான்மைச் சமூகம் வழங்கியுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தாம் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பில் சனிக்கிழமை(04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோம். பெரும்பான்மையின மக்களுடன் இணைந்துவாழ விரும்புகின்றோம். ஆனால், இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முனைகின்றனர் என்றார். தற்போது வடகிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் மட்டுமே ஆளுநர்களின் தலையீடுகள் அதிகமாகவுள்ளன. Read more

பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்-

sdfsdsddபிரித்தானியாவின் உயர் அதிகாரிகள் இருவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் நிரந்தர செயலாளர் சைமன் மெக் டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து நிறுவனத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லொவ்கொக் ஆகியோரே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். மேலும், இவர்களின் இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

பஷில் பிணையில் விடுதலை, நாமலிடம் விசாரணை-

basilமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ச பூக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுகாலை ஆஜரானார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி உட்பட, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சில விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரையொதுங்கியது-

dead.bodyநெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

மேலும் இது இந்திய அல்லது இலங்கை மீனவராக இருக்க முடிலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதீபதி சடலத்தினை பார்வையிட்ட பின்னர், அதனை, யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெடுந்தீவு பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பில் பாடசாலையைப் பூட்டி ஆர்ப்பாட்டம்-

et565கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலை கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாடத்தில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1ஏபி தரத்தினைக் கொண்ட இப் பாடசாலையில் சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனினும், இங்கு 100 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ் வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக தற்போது 62 ஆசிரியர்கள் மாத்திரமே இப் பாடசாலையில் உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர். Read more

கொஸ்கம பாதுகாப்பை உறுதிப்படுத்த 96 மணித்தியாலம் தேவை-இராணுவம்-

435454அவிசாவளை – கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 05.30 அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதேவேளை, இந்த சம்பவத்தால் களஞ்சியசாலையில் இருந்த பாரிய குண்டுகள் உட்பட ஆயுதங்கள் சில அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கிருந்த வீடுகள் சில பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன. வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதோடு, குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள குடியிருப்புக்களில் மாத்திரம் மக்கள் மீண்டும் வரலாம் என, இன்றுகாலை இராணுவம் அறிவித்தது. இந்நிலையில், அப் பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பின் அவற்றை தீண்டாது, உடன் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு இராணுவம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் காண்பவர்கள் 011 3 81 86 09 அல்லது 011 2 43 42 51 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more