northநினைவேந்தல் நிகழ்வுகள் என்ற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டி வரும். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் என அறிவிக்கப்பட்டு இம் மாதம் 12ம் திகதி தொடக்கம் வடக்கில் பல இடங்களிலும் நினைவு கூரப்பட்டு வருகின்றமையும் கடைசிநாள் மே 18 முள்ளிவாக்காலில் இறுதிநாள் அஞ்சலி நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.