சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள், மற்றும் சிறப்பு பிரதிகள் பெற அழைக்கப்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். Read more
சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவரும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ரவீந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழா வாழ்வத்தில் இடம்பெற்றது.
தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கட்டணங்கள் யாவும் 14.4 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு தரப்பினர் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.