Header image alt text

13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் சந்திப்பு நேற்று கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள குளக் டவர் விடுதியில் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more

தபால் ஊழியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, இன்று (13) மாலை 04 மணி தொடக்கம் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கபூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே ஜனாதிபதி, சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கையில் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு டோஸ் பைசர் தடுப்பூசியை போடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிபுணத்துவ குழுவால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். Read more