பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக பிரபல பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்தா தேவராஜன், சர்வதேச நாணய நிதியத்தின் திறன் அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் ஷர்மினி குரே ஆகியோரே நியமிக்கடிப்பட்டுள்ளனர்.