தோழர் கடாபி (பொன்னுத்துரை விஸ்வலிங்கம்) அவர்களின் பூதவுடல் அவரது வவுனியா தெற்கிலுப்பைக்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது வவுனியா மாவட்ட கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தோழர் கடாபிக்கு கழக கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more

வவுனியா சமளங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் ஆசிரியர் கௌரவிப்பும் இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று (09) நள்ளிரவு முதல் போராட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தங்கியுள்ளனர்.
அரசாங்கத்திலிருந்து பதவி விலகியுள்ள அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்கள், வாகனங்கள், தளபாடங்கள், அலுவலக உபகரணங்களை மீளப்பெற வேண்டுமென அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் திறைசேரி அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றிரவு(10) 7 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Gota GO Home” போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எங்களுக்கு கோட்டா வேண்டும், “We want Gota” என ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கண்டி மற்றும் தங்காலையிலேயே ஆர்ப்பாட்டங்கள் இன்று (10) முன்னெடுக்கப்படுகின்றன.