வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் திரு தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பீ.ஏ.சரத்சந்திர அவர்களை அண்மையில் இரண்டு தடவைகள் நேரில் சந்தித்து மக்களுக்கு சீரான மண்ணெண்ணெய் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.

அத்துடன் இன்று முற்பகல் மீண்டும் திரு. யோகராஜா அவர்கள் அரச அதிபருடன் தொடர்புகொண்டு இவ்விடயத்தை கேட்டுக்கொண்டபோது,

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை 10லீற்றர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டையின் அடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின்கீழ் மண்ணெண்ணெய் விநியோகிக்கும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வழங்கப்படுமென்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரக்கறி செய்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக மண்ணெண்ணெய் வழங்குவதன் அவசியத்தை தவிசாளர் வலியுறுத்தியபோது, இது சம்பந்தமாக விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.