May 22
2
Posted by plotenewseditor on 2 May 2022
Posted in செய்திகள்
தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு சீனாவின் முழுமையான ஆதரவை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (மே 02) மீண்டும் வலியுறுத்தினார். நிதியமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது Qi Zhenhong இதனை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக, இலங்கையின் சிரமங்களை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் சரியான உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா ஒரு செயலில் பங்கு வகிக்க தயாராக உள்ளதாக Qi Zhenhong மேலும் தெரிவித்துள்ளார்.