அம்பாறை காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் (07-05-2022) இன்று பி.ப 2.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

கழகத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி (ரவிச்சந்திரன்) அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சண்முகராஜா, மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளரும் கட்சியின் உப தலைவர்களின் ஒருவருமான பொன் செல்லத்துரை (கேசவன்), மட்டு மாநகர சபையின் உறுப்பினரும், கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ம.நிஸ்கானந்தராஜா (சூட்டி), தோழர் பக்தனின் குடும்பத்தினர், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர் , அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.