நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது Read more
இன்றைய தினம் அரசாங்கத்தில் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவின் 47ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டாட்சித் தேர்தலில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார் என்பதுடன், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இலங்கைப் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளை (23) நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும் மாணவர்கள், பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் எவ்வித தடையுமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பொதுமக்கள் வழங்க வேண்டும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை விடுத்தார்.
உலக நாடுகளில் கொரோனா தொற்றின் ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மேற்கத்தேய நாடுகளில் புதிதாக ‘மங்கி பொக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு அம்மை பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை நடத்திவருகிறது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது. அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா(முல்லை), வசந்த்(யாழ்), மாதவன்(தலைவர்-ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்),
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.