வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, புனர்வாழ்வு பெற்றுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் மாலை விளையாட்டுப் பயிற்சியின்போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய 5 பேரும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தேடும் நடவடிக்கையை நேற்று (15) முதல் காவல்துறையினரும், இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.