அதிகார பகிர்வின்போது மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடம் மலையக அரசியல் அரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் அதிகார பகிர்வு கொண்டுவரப்படும்போது மலையகத் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடம் வலியுறுத்தியதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். Read more
வவுனியா நகர சபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் பாதீட்டு நிதியில் வவுனியா கோவில்குளம் 5ம் ஒழுங்கை தார் வீதியாக செப்பனிடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.