வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2222 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், இன்று அவர்கள் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இதன்போது, அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியவாறு சர்வதேசம் தங்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட புதுடெல்லியில் நேற்று(21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.