கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி அடிப்படை விடயங்களை முன்வைப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
தேசிய கொள்வனவு ஆணைக்குழுவிற்கும் நிதி ஆணைக்குழுவிற்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் தலைவராக W.சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, D.A.பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகண்டு, A.G.புபுமு அசங்க குணவங்ஷ ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.