ஜனாதிபதி வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், அவர் வகித்த அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி நாடு திரும்பும் வரை குறித்த இரு அமைசுகளின் பொறுப்புகளையும் பதில் அமைச்சர்கள் வகிக்கவுள்ளனர். Read more
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) அதிகாலை பயணமானார். இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் K.சண்முகம் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான ஒரு நாள் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாளை(24) ஜப்பானுக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.