யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது இப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதால் எமது பிரதேசம் கொடி முந்திரிகை செய்கையை அதிகளவான விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்
இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி வந்துள்ளார். SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு நோக்குடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் அணியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் பாக்குநீரிணை ஊடாக தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(27) நடைபெற்றது. வட மாகாணத்தில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்ய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு(27) நாடு திரும்பினார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.