நாட்டில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.