Header image alt text

தொல்புரம் பகுதியில் புதிதாக மருத்துவ நிலையம் திறந்து  வைபவபு

untitleduntitled6untitled305.06.2014 அன்று தொல்புரம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ நிலையம் திறந்து வைக்கும் வைபவம் இடம் பெற்றது. இவ் வைபவத்தில் வட மாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராகவும் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும் போது இவ்வாறான அழப்பரிய பணியினை மேற்கொண்ட புலம் பெயர் உறவான பொறியியலாளர் பட்சம் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆரமப வைத்திய சாலையின் தேவையானது இந்த இடத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தப்பகுதி எமது பிரதேசத்தின் மக்கள் தொகை நிறைந்த பகுதி இது மட்டுமல்லாது அன்மையில் மீளக்குடியமர்ந்த மக்களை கொண்டுள்ளதாகவும் இப் பகுதி அமைந்துள்ளது. Read more

சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழா

untitled4untitled5untitled 1untitled 2சங்கானை கோட்ட முன்பள்ளி விளையாட்டு விழாகடந்த 05.06.2014 அன்று சித்தன்கேணி வட்டு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் உரையாற்றும் போது
இன்று இந்த கோட்ட மட்ட முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய சிறார்களே நாளைய நாட்டின் தலைவர்கள் இவர்களை செம்மையான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த சமூகத்தில் உள்ள அனைவரையும் சார்ந்ததாகும் இவ் சிறார்கள் இன்று எதிர்நோக்கும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளமானவை இவற்றிலிருந்து சிறார்களை மீட்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. குறிப்பாக இன்றைய சிறார்கள் பலவேறுவகையான துஸ்பிரயோகம் மற்றும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர். சிறுவர் தொழிலாளரகவும் உள்ளனர். Read more

தமிழக முதல்வருக்கு அமைச்சர் கெஹெலிய கண்டனம்

kehaliya rambukwellaModi_JayaPTI_231-3002தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் இனப்படுகொலை என்ற வார்த்தையை பிரயோகித்தமைக்கு, இலங்கையரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்த ஜெயலலிதா ஜெயராம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் பிரேரணை ஒன்றை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனினும் ஜனநாயக நாடுகளுக்கு இடையில் இவ்வாறு இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானது. அத்துடன் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையை மத்திய அரசாங்கம் அடைந்துள்ளமை இலங்கைக்கு நன்மையை தரும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். —மேலும் செய்திகள்———- Read more