தொல்புரம் பகுதியில் புதிதாக மருத்துவ நிலையம் திறந்து வைபவபு
05.06.2014 அன்று தொல்புரம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ நிலையம் திறந்து வைக்கும் வைபவம் இடம் பெற்றது. இவ் வைபவத்தில் வட மாகாண ஆளுனர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராகவும் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும் போது இவ்வாறான அழப்பரிய பணியினை மேற்கொண்ட புலம் பெயர் உறவான பொறியியலாளர் பட்சம் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆரமப வைத்திய சாலையின் தேவையானது இந்த இடத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்தப்பகுதி எமது பிரதேசத்தின் மக்கள் தொகை நிறைந்த பகுதி இது மட்டுமல்லாது அன்மையில் மீளக்குடியமர்ந்த மக்களை கொண்டுள்ளதாகவும் இப் பகுதி அமைந்துள்ளது. Read more