இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதாவுக்கு எதிராககோசங்கள் ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு- கொழும்பில்

M1a(740)இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் மோடிக்கு எதிராக அரசாங்க ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என வலியுறுத்தி தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரது உருவப்பொம்மையும் எரியூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்துவிட்ட போதும் பயங்கரவாதத்தாலும் போரினாலும் உண்டான வடுக்கள்  இன்னும் மாறவில்லை.  நவநீதம்பிள்ளை 

navipillai aluvalagamஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் ஆரம்ப உரையில் பொறுப்பு கூறுதலையும் அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும்  இந்த பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான  விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம்  நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினருக்கு பல நிபுணர்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களும்  உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளனர். நம்பகமான உண்மையினை கண்டறியும்  செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை  பயன்படுத்திக்கொள்ளுமாறு  நான் அரசாங்கத்திடம் கேட்கிறேன்;.
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை  சுட்டிக்காட்டியதால் தான் முகங்கொடுத்த விமர்சனங்களை பற்றி  தனது உரையில் குறிப்பிட்ட அவர், பூகோள விழுமியங்களின் கொள்ளை ரீதியான அமைப்பை பாதுகாப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கிய நன்மை உண்டாகுமென  கூறினார். Read more