Header image alt text

இலங்கை ஜனாதிபதி பொலிவியாவுக்கு விஜயம்

1aa(56)பொலிவியா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது ஒன்றை வழங்க உள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான விசேட விருது ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் இல் முன்டோ என்னும் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜீ77 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பொலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜீ77 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பொலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ரெலோவை சேர்ந்த எவராவது கொலைகள் -ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென நீரூபிக்கப்பட்டால் நடவடிக்கை:

teloதமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்ந்த எவராவது கடந்த காலங்களில் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டவர்களென விசாரணைகளில் உறுதிப் படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் நாம் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென அக்கட்சியின் பிரமுகரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களில் எமது அமைப்பிலிருந்து விலகிய சிலர் வெள்வேறு தரப்புக்களால் இயக்கப்பட்டனர். அவர்களே அத்தகைய குற்றசெயல்களில் ஈடுபட்டதாக தாம் நம்புவதாகவும், யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் அங்கு தெரிவித்தார். Read more