Header image alt text

சங்குவேலி விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான விதைகள் வழங்கல்-

sfdfddயாழ். சங்குவேலி விவசாய சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தினை ஆரம்பிப்பதற்காக “நாங்கள்” என்ற அமைப்பு இன்று (30.05.2015) பயிர்ச் செய்கைக்கான விதைகளை விநியோகித்து உதவியுள்ளது. “நாங்கள்” அமைப்பின் செயலாளர் திரு. பிரதாப் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் அனுசன் ஆகியோர் பயிர்க்களுக்கான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிவைத்தார்கள். இளைஞர் சம்மேளனத்தின் வட மாவட்டத் தலைவர் திரு. விஜிதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். Read more

நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிடம் திறந்துவைப்பு-

neliyadiயாழ். நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா அண்மையில் தவிசாளர் வியாகேசு தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கலந்து சிறப்பத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

தாயகத்து உறவுகளை தலைநிமிர வைப்போம்-

ddபிரான்சை தளமாக கொண்டு இயங்கும் ரி.ஆர்.ரி தழிழ் வானொலியின் அனுசரனைக்கூடாக வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயல் திட்டத்தில் குறித்த வானொலிக்கூடாக இணைந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. லாலாரவி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியூடாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணியில் வசிக்கும் திருமதி.பி.சந்திரமாலா என்ற போரில் மிகக்கடுமையான பாதிப்புக்களோடு வாழும் பெண்ணுக்கு அவரது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கூரைத்தகடுகள், கம்பிவலைகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் 30.05.2015 அன்று குறித்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார். குறித்த பெண்மணி தற்போது மேற்படி வீட்டில் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். Read more

சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்-

maithripala3சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித பிரணாந்து, எஸ்.அனில் சில்வா, மனோஹார டி சில்வா, பேராசிரியர் ஹர்ஷ கபில்ராஜ், இக்ரம் மொஹமட், சஞ்ஜீவ பிரனீத் ஜெயராஜ் ஆகியோரும் சட்டத்தரணிகளான பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்க, தாரணி எஸ்.விஜேதிலக, பேராசிரியர் காமிலா குணரத்ன, எம்.சுவாமிநாதன், என்.செல்வக்குமார், நவீன் சரத்மாரப்பன, திசாத் விஜேகுணவர்த்தன, ஜீ.ஜீ.அருள்பிரகாசம் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை 2015ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்-

cpaமறுசீரமைப்பு மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு பொறிமுறை ஆரம்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவை எவ்வாறு செயற்படவுள்ளன, அதன் கால எல்லை மற்றும் உள்ளடக்கப்படவுள்ள பிரதேசம் போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவ்வாறான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணை-

newsகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டார். அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கிய அணிகளை, ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததுடன், ஆட்சிக்கு வந்த பின்னரும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அந்த அணிகள் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஷ்பிரயோகம்-

radhakrushnanகடந்த 14 நாட்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் சில சம்பவங்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய கடந்த இரு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச் சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் அமைச்சர் ஜெனீவாவிற்கு விஜயம்-

dfddஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச தொழில் சம்மேளனத்தில் பங்கேற்கும் நோக்கில் இன்றுமாலை தொழில் அமைச்சர் நாவின்ன ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளார். தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கையின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளங்கள் குறித்து அமைச்சர் விசேட உரையாற்ற உள்ளார். சர்வதேச தொழில் சம்மேளனத்தில் சுமார் 185 நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நாரந்தனையில் இளைஞன் மீது வாள்வெட்டு-

knifeயாழ். நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த குழு, இளைஞன்மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் என்பவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.