Header image alt text

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணில் ஐதேக உறுப்பினர்கள் 500 பேர்

UNP PAஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள, மக்கள் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 500 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் எந்த தேவையும் தமக்கு இல்லை எனவும், கட்சியை பாதுகாப்பதே தமது தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

லஞ்ச ஊழல் தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் கைது -மலேசியா

arestdமலேசிய அரசின் நிதியில் இருந்து சுமார் 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துவரும் பிரதமர் நஜீப், கடந்த சனிக்கிழமை போர்னியோ மாநிலத்தில் உள்ள ஒரு மசூதியில் இருந்து வெளியேவந்தபோது, அவரை நெருங்கிய இரு நிருபர்கள், ‘உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினர். Read more

கடும் வெயில், பொருளாதார சிக்கல் – அல்லலுறும் மலையக மக்கள்
 
teeமலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாத காலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான வெயில் நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

கடுமையான பணி காரணமாக அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு, தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. Read more