கண்ணீர் அஞ்சலி
அன்னை மடியில்: 01.01.1930 இறைவன் மடியில்: 20.03.2016
அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி மற்றும் சுவிஸ்லாந்தின் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட (இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்) அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினுடைய செயற்பாடுகள் சிறப்புற அமைவதற்கு அறிவுரைகளையும், உதவிகளையும் வழங்கியவர் என்பதோடு. எமது செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்.
சுவிஸ் கிளையினால் நடாத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கான பரீட்சைப் போட்டீ நிகழ்வுகளுக்கு பூரண ஆதரவும், ஆலோசனைகளையும் வழங்கி உதவிகள் பலவும் செய்தவர்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினராகிய நாமும் இப் பெருந்துயரரினைப் பகிர்ந்துகொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
துயர் பகிர்வு
கழகப் பணிகளிலே கண்ணியமாய் நின்று
ஊக்கமும் உறுதுணையும் தந்தவரே!
தேசத்தின் நலனில் நேசம் கொண்டதனால்
தாய் நிலத்திலும் புலத்திலும்
தன் பணியை தளராது செய்து காட்டிய சேவகரே!
உங்கள் பிரிவென்பது எமக்கு
பெரும் பெருந்துயரைத் தருகின்றது
எம் நேசத்திற்குரியவரே!
விதை முளைத்தால் அது மரம்
மரம் இறந்தால் அது மண்ணுக்கு உரம்
எமக்கு இழப்பு பெரிதாகிலும்
இயற்கையின் நியதியை
மாற்றமுடியாது என்ற எதிர்வினையோடு
மாறாத் துயர் சுமந்து அஞ்சலித்து நிற்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)
சுவிஸ் கிளை – 24.03.2016