Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
நாட்டின் தென்பகுதியில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட மழை, மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
வெள்ள அனர்த்தம் ஏற்படும் முன்பே சில பகுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதும் சில குடும்பங்கள் வெளியேறாமல் இருந்தமையால் பலர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். எனவே வரும் நாட்களில் அநாவசிய குடியிருப்புக்கள் அனைத்தையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 May 2017
Posted in செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 30 May 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 May 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 May 2017
Posted in செய்திகள்
பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும் தமிழ் அரசியல்தலைவர்களில் ஒருவருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்பானவர், மிகவும் எளிமையானவர், முதிர்ந்த அரசியல்வாதி என்ற பண்புகளுக்கும் அப்பால் அவர் எமதினத்திற்கு ஆற்றிய கடினமான சேவைகளை இத்தருணத்தில் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். Read more
Posted by plotenewseditor on 29 May 2017
Posted in செய்திகள்
பட்டியல் 1 தீபம் குழு
நமது மக்கள் பிரதிநிதிகள் எதற்காக பாராளுமன்றம் சென்றார்கள்?. குடும்பத்திற்காகவா? ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கவா? பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவா? பதவி, புகழ் ஆசையா? இல்லவே இல்லை. அப்படியானால்?
Posted by plotenewseditor on 29 May 2017
Posted in செய்திகள்
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளரும் இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் முன்னாள் முகாமையாளருமான என்.பாலராமன் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல் வெள்ளவத்தை , ஈ.ஏ.கூரே மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிகிரியைகள் வியாழக்கிழமை நடைபெறும்.
Posted by plotenewseditor on 28 May 2017
Posted in செய்திகள்
தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் பகல் ஒரு மணியளவில் தனது 84 ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.