sds (2)யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இராணுவத்தினர் மூவரும் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.