ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Read more
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30ம் திகதி இரவு 11.30 மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியாகியுள்ளது.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நதி முருகன் ஆலய கடற்பகுதியில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.