Header image alt text

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  Read more

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர், இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெகுசன ஊடக அமைச்சராக, கெஹெலிய ரம்புக்வெல்ல இருந்த வேளையில், அவரது தனிப்பட்ட தொலைபேசி பட்டியலை, அரசாங்க அச்சு திணைக்களத்தின் நிதியில் செலுத்தியதாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. Read more

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க கோரியுமே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பணியாளர் சபை பிரதிநிதிகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளல் Read more

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதி நிதித்துவப் படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுடன் நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். Read more